Saturday, August 23, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் மூதாட்டியை கொன்று கிணற்றில் வீசிய அம்மா, மகன், மகள் கைது

திருச்சி மாவட்டம் மணப்பாறை ஜீவா நகரில் வசித்து வந்தவர் ஜெயராமன் கமலவேணி (65). இவர் வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கி வருபவர். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த சரஸ்வதி (52) என்பவருக்கு ரூ 1.60 லட்சம் பணம் வட்டிக்கு கொடுத்துள்ளார்.

வட்டி பணத்தை கடந்த மாதம் 16ம் தேதி அன்று சரஸ்வதியின் வீட்டிற்க்கு சென்று கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சரஸ்வதி கமலவேணியை தாக்கியுள்ளார். இதில் அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை மறைப்பதற்காக சரஸ்வதி அவரது மகள் வர்சினி (22), மற்றும் மகன் ஹர்சன் (19) ஆகிய மூவரும் சேர்ந்து கமலவேணியின் உடலை சாக்கு மூட்டையில் கட்டி இரவோடு இரவாக

ஒரு இருசக்கர வாகனத்தில் ஏற்றி கொண்டு ஜீவா நகர் பகுதியில் இருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குரு நகர் பகுதிக்கு கொண்டு சென்று அங்கு உள்ள குளத்து கரை காளியம்மன் கோவில் கேணியில் கமலவேணியின் உடலை கட்டிய சாக்கு மூட்டையை தூக்கி போட்டுள்ளனர். இந்த நிலையில் கமலவேணியின் மகள் மலர்விழி கடந்த மாதம் 17ம் தேதியன்று தனது தாய் கமலவேணியை நேற்று முதல் காணவில்லை என்று மனப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரை கொண்டு விசாரணை நடத்தி வந்தனர். இதில் கமலவேணி 16ம் தேதி கடைசியாக சரஸ்வதி வீட்டிற்கு வந்தாக கூறப்பட்ட நிலையில், அவரை தொடர்ந்து விசாரணை நடத்தி வந்ததில் சரஸ்வதி நான் தான் கமலவேணியை கொலை செய்தாக கூறியதை அடுத்து கமலவேணி, மற்றும் மகள் வர்சினி, மகன் ஹர்சன் ஆகிய மூன்று பேரையும் மணப்பாறை காவல் துறையினர் கைது செய்து விசாரணை செய்தனர். 16 நாட்களுக்கு பின் கிணற்றில் இருந்து கமலவேணி சடலமாக மீட்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *