Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

மோட்டார் பைக்குகள் மோதி விபத்து – இளைஞர் பலி – மற்றொருவர் படுகாயம்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே தளுதாளப்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் இவருடைய மகன் ஆனந்த் (22). இவர் தனது மோட்டார் பைக்கில் தளுதாளப்பட்டியை நோக்கி சென்று கொண்டிருந்தார். இவருடைய பைக்கில் மற்றொருவர் பின்னால் அமர்ந்துள்ளார்.

இந்நிலையில் தத்தமங்கலம் மெயின் சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த மோட்டார் பைக் மீது எதிர்பாராதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த ஆனந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடன் வந்தவர் படுகாயம் அடைந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த சிறுகனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் பலியான ஆனந்த் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த மற்றொருவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *