Thursday, August 14, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

சாலையில் செல்ல வாகன ஓட்டிகள் அச்சம் – நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருச்சி மாவட்டம், திருவரங்கம் தொகுதிக்கு உட்பட்ட நவலூர்குட்டப்பட்டு ஊராட்சி, வண்ணாங்கோவில் கிராமத்தில் இயங்கி வரும் ரெடிமிக்ஸ் கான்கிரீட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. 

இங்கிருந்து அதிக பாரம் ஏற்றி கொண்டு கான்கிரீட் வண்டிகள் திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை மற்றும் திருச்சி தேசிய நெடுஞ்சாலை பாகனூர் சாலையில் ஆங்காங்கே கான்கிரீட் கலவைகள் சாலையின் நடுவிலும், ஓரங்களில் கான்கிரீட் கழிவுகளை ஆங்காங்கே கொட்டி வருகின்றனர்.

இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் பாதசாரிகள் மற்றும் திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்யும் வாகனங்களும் விபத்துக்குள்ளாகவும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் கான்கிரீட் கழிவுகளை கொட்டுவதால் சாலை ஓரம் பயணிக்கும் இரு சக்கர வாகனங்கள் தடுமாறி கீழே விழவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. ஆகவே விபத்து நேரிட்டு உயிரசேதம் ஏற்படும் முன் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *