Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

கொலை குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

கடந்த 22.09.22-ந்தேதி பால்பண்னை அருகில் ஆட்டோ டிரைவர் ஒருவரை கொலை செய்ததாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்குபதிவு செய்யப்பட்டு, எதிரி விஜய்பாபு வயது 25/22 த.பெ.சவுந்தராஜன் என்பவரை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் விசாரணையில ரவுடி விஜய்பாபு மீது ஒரு கொலை வழக்கும், காதல் பிரச்சனையில் ஒருவரை கொலை முயற்சி செய்ததாக ஒரு வழக்கும், இளைஞர்களை சீரழிக்கும் கஞ்சா விற்பனை செய்த ஒரு வழக்கும், கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தாக 4 வழக்குகள் உட்பட 11 வழக்குகள் நிலுவையில் உள்ளது விசாரணையில் தெரியவருகிறது.

எனவே ரவுடி விஜய்பாபு தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவதும், கொலை செய்வதும், சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதும், திருட்டு மற்றும் கத்தியை காட்டி பணம் கொள்ளையடிப்பது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர் என விசாரணையில் தெரியவருவதால், மேற்கண்ட எதிரியின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு காந்திமார்க்கெட் காவல் ஆய்வாளர்கள் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன், மேற்படி எதிரியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள ரவுடி விஜய்பாபு மீது குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்பு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்

மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர்   எச்சரிக்கை விடுத்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய..

https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *