Thursday, August 14, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் டாஸ்மாக் வாசலில் கொலை – அமமுக தொண்டரை தேடும் போலீஸ்

திருச்சி திருவரம்பூர் பாலாஜி நகரை சேர்ந்தவர் சரண்ராஜ் வயது 40. இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இன்று மாலை திருச்சி உறையூர் கடைவீதியில் உள்ள டாஸ்மாக் கடையில் அவருடைய நண்பருடன் மது அருந்திவிட்டு வெளியே வந்துள்ளார். 

அப்போது சரண்ராஜ்க்கும் அவரது நண்பருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது. இதில் ஆத்திரம் அடைந்த அவர் நண்பர் சரண்ராஜை கத்தியால் குத்தியுள்ளார். இதில் மயங்கிய அவர் டாஸ்மார்க் கடை வாசலில் ரத்த வெள்ளத்தில் கிடந்து உயிர் இழந்தார்.

இதுகுறித்து உறையூர் காவல் நிலையத்துக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனை அனுப்பி வைத்துள்ளனர். மேலும் கொலை செய்தவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழக தொண்டர் சுவாமிநாதன் என புகைப்பட  வீடியோ காட்சிகளில் தெரிவதாகவும் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *