Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

நிலப்பிரச்சனையில் கொலை – மூவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5000 அபராதம்

திருச்சி மாவட்டம், ராம்ஜிநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடக்கு அரியாவூர் கிராமத்தை சேர்ந்த செல்வம் என்பவருக்கும், வீரமலை கார்த்திக், சுரேஷ், கருப்பசாமி ஆகியோர்களுக்கும் நிலப்பிரச்சனை இருந்து வந்தது. இந்த நிலையில், சம்பவ நாளன்று மூவரும் செல்வம் என்பவரின் வீட்டிற்கு சென்று, செல்வத்தை அருவாள் மற்றும் கட்டையால் தாக்கி கொலை செய்துள்ளனர். 

இச்சம்பவம் தொடர்பாக, இறந்து போன செல்வத்தின் மனைவி அருவி கொடுத்த புகாரின் பேரில் ராம்ஜிநகர் காவல் நிலைய வழக்கானது திருச்சி இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து வீரமலை கார்த்திக், சுரேஷ், கருப்பசாமி ஆகியோர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டது.

மேலும் குற்றவாளிகளுக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ.5,000/- அபராதமும், அபராத தொகை கட்ட தவறும்பட்சத்தில் ஆறு மாத காலம் கூடுதல் சிறை தண்டனையும் விதித்து இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். 

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *