Saturday, August 16, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சி எம்ஜிஆர் சிலைக்கு காங்கிரஸ் துண்டால் முக்காடு போட்ட மர்ம நபரால் பரபரப்பு!!

திருச்சியில் மிக முக்கிய பகுதியான நீதிமன்றம் ரவுண்டானா அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு காங்கிரஸ் துண்டால் முக்காடு போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே எம்ஜிஆர் சிலை உள்ளது. அப்போது பராமரிப்பு பணிக்காக அங்கு வந்த நபர்கள் சிலையின் தலையில் காங்கிரஸ் துண்டால் முக்காடு போட்டு போடப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்து அதிமுகவினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த 

சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மகன், ஜவகர் துண்டை அப்புறப்படுத்தியதுடன் இது குறித்து செஷன்ஸ் கோர்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

Advertisement

புகாரின் பேரில் போலீசார் அங்கு உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

தேர்தல் நெருங்கி வரும் வேளையில் திருச்சியின் முக்கிய பகுதியில் பட்டப்பகலில் எம்ஜிஆர் சிலைக்கு முக்காடு போட்டு சென்றதால் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *