Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

என்.ஐ.ஏ விசாரணை – இஸ்லாமிய கூட்டமைப்பினர் எதிர்ப்பு

திருச்சி மாவட்ட இஸ்லாமிய கூட்டமைப்பின் தலைவர் ஹபீபுர் ரகுமான், துணைத் தலைவர் உதுமான் அலி ஆகியோர் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில் தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து இஸ்லாமிய இளைஞர்களை என் ஐ ஏ மற்றும் காவல் துறையினர் விசாரணை செய்து அச்சுறுத்தப்படுகிறார்கள்.

தவறான செய்திகளை தந்து அவர்கள் கைது செய்யப்படுவதால் இஸ்லாமிய சமூக மக்களிடையே ஒருவித பதட்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் பொது சமூகத்தில் இருந்து இஸ்லாமிய மக்களை தனிமைப்படுத்தும் நிகழ்வாகவே இது இருக்கிறது. இதனால் இஸ்லாமிய இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது.

ஒருவேளை இஸ்லாமிய இளைஞர்கள் மீது ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதை முறையாக கூட்டமைப்பு நிர்வாகிகளிடம் தெரிவித்தால் நாங்களே விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கிறோம்.

எனவே இஸ்லாமிய இளைஞர்களை தொடர்ந்து அச்சுறுத்தும் காவல்துறை நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH           

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *