24.1.2022 அன்று தேசிய பெண் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு, சாரநாதன் பொறியியல் கல்லூரியின் NSS பிரிவு மற்றும் மகளிர் அதிகாரமளித்தல் (Women Empowerment Ceil) பிரிவு சார்பாக அம்மாவுடன் செல்ஃபி சுவரொட்டி உருவாக்கம், கட்டுரை எழுதுதல், பேச்சு, ரங்கோலி, புகைப்படம் எடுத்தல் போன்ற பல்வேறு நிகழ்வுகள் மற்றும் போட்டிகள் நடத்தப்பட்டன.
இக்கல்வி நிறுவனத்தின் 203 மாணவிகள் ஆர்வத்துடன் இப்போட்டிகளிலில் கலந்து கொண்டனர். ஆன்லைன் வெபெக்ஸ் தளம் மூலம் 24.01.2022 அன்று மாலை 3.30 மணிக்கு “பெண் குழந்தைகளின் அதிகாரமளித்தல்” என்ற தலைப்பில் ஒரு சிறப்புப் பேச்சுக்கும் ஏற்பாடு செய்துள்ளனர். ஷ்யாமலா நர்சிங் இல்லத்தின் தலைமை மகப்பேறு மருத்துவர் டாக்டர் என்.காயத்திரி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
தனது உரையில், ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கிடைக்க வேண்டிய உரிமைகள் பற்றி குறிப்பிட்டுள்ளார். சமூகத்தில் ஒரு பெண்ணின் சுயமரியாதையை நிலைநாட்ட வேண்டியதன் அவசியத்தையும் டாக்டர் காயத்திரி தனது உரையில் வலியுறுத்தினார். முக்கியமாக, நடைமுறை வாழ்க்கையில் ஒரு பெண் குழந்தை எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் அந்த பிரச்சனைகளை கையாள்வதற்கான தீர்வுகள் குறித்து மகப்பேறு மருத்துவர் கவனம் செலுத்தினார். சிறப்புரையில் மொத்தம் 360 மாணவிகள் கலந்து கொண்டனர். தகவல் தொழில்நுட்பத் துறையின் பேராசிரியை மற்றும் தலைவி டாக்டர் வி புனிதா வரவேற்றார்.
முதல்வர் முனைவர் டி.வளவன் வாழ்த்துரை வழங்கினார், இசிஇ துறை பேராசிரியர் டாக்டர் சி.வெண்ணிலா நன்றி கூறினார். தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களும் அறிவிக்கப்பட்டனர். அனைத்துத் துறைகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் மற்றும் பேராசிரியர்கள் பல்வேறு கலாசார நிகழ்வுகளில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு நிகழ்ச்சியைக் கண்டுகளித்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments