Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி காவல் துறை – மாற்றம் ஒன்றே மாறாதது

திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் கூடுதல் எஸ்பி பால்வண்ணநாதன் கடந்த வாரம் பணிஓய்வு பெற்றார். இந்த பணியிடத்திற்கு புதிய கூடுதல் எஸ்.பி.யாக தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றி வந்த கோடிலிங்கம் நியமிக்கப்பட்டார். இவர் நேற்று புதிய பதவியினை ஏற்றுக்கொண்டார். இவர் மாநகர குற்றப்பிரிவு கூடுதல் எஸ்.பியாக பொறுப்பு வகிப்பார். இவர் இதற்கு முன்பு திருச்சி மாநகரில் சப் இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல, திருச்சி மாநகர நுண்ணறிவுபிரிவு உதவி ஆணையராக பணியாற்றி வந்த செந்தில் குமார் குளித்தலை டிஎஸ்பியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். குளித்தலை டி.எஸ்.பியாக பணியாற்றி வந்த ஸ்ரீதர், மாநகர நுண்ணறிவுபிரிவு உதவி ஆணையராக நியமிக்கப்பட்டார். புதிய உதவி கமிஷனராக பொறுப்பெற்றுக் கொண்டுள்ள ஸ்ரீதர், இதற்கு முன்பு ஸ்ரீரங்கம் காவல்நிலையம் உட்பட மாநகரில் பல்வேறு இடங்களில் பணியாற்றியவர். அதேபோல இவர் இதற்கு முன்பு இதே நுண்ணறிவு பிரிவில் சப் இன்ஸ்பெக்டராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம் திருச்சி சரக போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு டி.எஸ்.பியாக தினேஷ் குமார் பதவியேற்றுக்கொண்டார், மேலும் ஒரு டி.எஸ்.பியாக சிறப்பு நுண்ணறிவுப்பிரிவு அதிகாரியாக இன்னும் ஒரு வாரத்தில் பிரபாகரன் பதவியேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இவர்கள் அனைவரும் திருச்சியிலேயே பழம் தின்று கொட்டை போட்டு வளர்ந்தவர்கள் என்பதால் வரும் காலங்களில் குற்றச்செயல்கள் வெகுவாக குறையும் என திருச்சி வாழ் மக்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள் நம்பிக்கைதானே வாழ்க்கை !

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *