திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் கள்ளிக்குடி கிராமத்தில் 15வது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் ரூபாய் 31.45 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய துணை சுகாதார நிலைய கட்டிடத்தை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, குத்து விளக்கு ஏற்றி வைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
அருகில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் எம்.பழனியாண்டி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தேவநாதன், துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) மரு.சுப்பிரமணியன்,
மணிகண்டம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கமலம் கருப்பையா, வைரமணி, உள்ளாட்சி பிரதிநிதிகள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் பலர் உள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments