Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

என் ஐ டி கல்லூரி மாணவி மாயம் – சிக்கிய கடிதம் – டிஎஸ்பி விசாரணை

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள என் ஐ டி கல்லூரி மத்திய அரசின் மனித வள துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலிருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் மாணவ மாணவிகள் பொறியியல் மற்றும் ஆராய்ச்சி கல்வி பயின்று வருகின்றனர்.

அப்படி வெளி மாநிலம் மற்றும் நாடுகளில் இருந்து கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கியும் வெளியில் அறைகள் வீடுகள் வாடகைக்கு எடுத்தும் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த மாணவி ஓஜஸ்வி குப்தா என்ஐடி கல்லூரி விடுதியில் தங்கி எம்சிஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 15ம் தேதி விடுதியை விட்டு வெளியே சென்றவர் விடுதிக்கு திரும்பவில்லை அவரது செல்போன் எண்ணும் அனைத்து வைக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக என்ஐடி கல்லூரி பாதுகாவலர்கள் துவாக்குடி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.

அதன் அடிப்படையில் துவாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று திருவெறும்பூர் டிஎஸ்பி அலுவலகத்தில் காணாமல் போன மனைவியின் பெற்றோர் மற்றும் என்ஐடி பாதுகாப்பு அலுவலகம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் போது மாணவி ஒஜஸ்வி குப்தா, கலந்து சில நாட்களாக படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை எனவும், தேர்வு பயம் இருந்து வந்ததாகவும், அவரது பெற்றோரிடம் கூறியுள்ளார். 

மேலும் சைக்கிள் டெஸ்ட் என்று சொல்லக்கூடிய தேர்விற்கு அவர் சரிவர படிக்கவில்லை என தனது அண்ணனிடம் ஃபோனில் பேசி உள்ளார். அதேபோல் தன்னுடன் படிக்கக்கூடிய சக மாணவர்களிடமும் தேர்வு குறித்து பயத்தில் உள்ளதாக கூறியுள்ளார். இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி அவர் ஒரு கடிதம் எழுதிவிட்டு அதில் தான் ஒரு பெரிய கல்வி நிறுவனத்தில் படித்து வருவதாகவும், தேர்வில் பயம் இருப்பதாகவும், அதனால் மன உளைச்சலில் இருந்து வந்ததாக எழுதி உள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.  

அதேபோல் அவர் கல்லூரியை விட்டு வெளியே சென்ற போது கையில் ஒரு சிறிய பையுடன் மட்டுமே சென்றுள்ளார். மேலும் சத்திரம் பேருந்து நிலையம் செல்லக்கூடிய பேருந்தில் ஏறி சென்றுள்ளார். அவரது செல்ஃபோன் கல்லூரி விட்டு வெளியே வந்தவுடன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு இதுவரை ஆன் செய்யப்படவில்லை. மேலும் அவரது வங்கி கணக்கில் காணாமல் போன அன்று மீதமுள்ள தொகை எவ்வளவு இருந்ததோ அந்த தொகை இதுவரை எடுக்கப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது. அவரிடம் பாஸ்போர்ட் இல்லாததால் அவர் வெளிநாடு செல்ல வாய்ப்பு இல்லை.

அவரது கால் ஹிஸ்டரியை பொருத்தவரை அவர் பெற்றோரிடமே அதிக நேரம் பேசி உள்ளார். மேலும் காதல் விவகாரத்தினால் வெளியே சென்றுள்ளாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்த போது அவருக்கு காதலன் இருந்ததாக இதுவரை தெரியவில்லை. அவர் படிப்பில் கவனம் செலுத்த முடியாததால் தேர்வு பயத்தினால் மட்டுமே அவர் வெளியே சென்று இருப்பதாக போலீசாரின் விசாரணையில் தெரிய வருகிறது.

தொடர்ந்து போலீசார் மாணவியின் புகைப்படம் மற்றும் அடையாளத்துடன் கூடிய துண்டு பிரசுரங்களை அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதே போல் பேருந்து டிப்போவிற்கு அனுப்பி வைத்து டிரைவர் கண்டக்டர் மூலம் அடையாளம் கண்டறியவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *