Wednesday, August 6, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

போயர் ஒட்டர் இன மக்கள் வாக்குகள் இல்லாமல் தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது-மக்கள் ராஜ்யம் கட்சி நிறுவன தலைவர்

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே மக்கள் ராஜ்யம் கட்சி சார்பில் நடைபெறவிருக்கும் மாநாடு திடலில் நிறுவன தலைவர் பி.ஆர். சிவசாமி பேட்டி.சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி 13 பிரிவுகளை ஒரே பிரிவாக மாற்றி மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே வரும் 8ம் தேதி மாலை மக்கள் ராஜ்யம் கட்சி மற்றும் வீர போயர் இளைஞர் பேரவையும் இணைந்து அரசியல் எழுச்சி மாநாடு நடத்த ஏற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.இதனை முன்னிட்டு ஏற்பாடு பணிகளை ஆய்வு செய்த மக்கள் ராஜ்யம் கட்சி நிறுவன தலைவர் பி.ஆர். சிவசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது,  சாதிவாரி கணக்கெடுப்பை எந்த ஒரு குளறுபடியும் இல்லாமல் நேர்மையாக உட்பிரிவுகள் அனைத்தையும் கேட்டு கணக்கெடுப்பு நடத்தி மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கிட

 வேண்டும்.உடல் உழைக்கக்கூடிய போயர் ஒட்டறின சமூகம் அதிகப்படியாக மதுவுக்கு அடிமையாக உள்ளது. எனவே மதுக்கடைகளை மூடி மதுவிற்கு பதிலாக இயற்கை சார்ந்த தென்னை மர கள், பனை மர கள் இறக்க அனுமதி வழங்கி அதை சந்தைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.போயர் ஒட்டர் இன சமூக மக்கள் தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 13 பிரிவுகளாக பிரித்து எந்த ஒரு நிலையான சாதி சான்றிதழ் இல்லாமல் இரண்டு பிரிவுகள் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலும் ஒன்பது பிரிவு சீர் மரபினர் பழங்குடியினர் பிரிவிலும் இரண்டு பிரிவு பட்டியலின பிரிவிலும் வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் போயர் ஒட்டர் இன சமுதாய மக்களை ஒன்பது பிரிவுகளாக பிரித்து வைத்துள்ளார்கள். அவர்களது தொழிலைச் சார்ந்து கல் ஓட்டர் மண் ஒட்டர் சுண்ணாம்பு ஒட்டர் என தொழில்வாரியாக பிரித்து வைத்துள்ளனர்.ஒரு சாதிக்கு இரண்டு சான்றிதழ் தமிழகத்தில் தரப்படுகிறது என்றால் அது எங்களை போன்ற சீர் மரபினர் சாதிகளுக்குதான். ஒன்னு ட.என்.டி. இன்னொன்னு டி.என்.சி என இரண்டு சான்றிதழ் வழங்கி இந்த சமூகத்தை குளறுபடியில் தள்ளியிருக்கிறார்கள்.இந்த 13 பிரிவுகளையும் ஒன்றாக்கி ஒரே சாதியாக அறிவித்து மக்கள் தொகை அடிப்படையில் இட

ஒதுக்கீடு வழங்கிட வேண்டும் என்பதை வலியுறுத்திதான் இந்த மாநாடு நடக்கிறது.பல ஆண்டுகளாக கோரிக்கைகளை கொடுத்து கொடுத்து ஆட்சிகள் மட்டும்தான் மாறுகிறது ஆனால் இந்த சமுதாயத்தின் நிலை மட்டும் மாறவில்லை. இந்த சமுதாயத்தின் கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.ஏனென்றால் இங்கு வாக்கு வங்கியாக இருக்கக்கூடிய சமூகத்திற்கு முன்னுரிமை வழங்குகிறார்கள் ஆண்ட கட்சிகளும் ஆளுகின்ற கட்சிகளும். ஆனால் நாங்களும் வாக்கு வங்கியாக உருவெடுத்தால் எங்களுக்கு உண்டான

உரிமைகள் கிடைக்கும் என்ற நோக்கத்தில் தான் 2020 ஆம் ஆண்டு அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு பல லட்சம் மக்களை ஒன்றிணைத்து இந்த அரசியல் மாநாட்டை நடத்துகிறோம். இந்த மாநாடு மூலமாக 20 அம்சம் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மாநாட்டில் முழக்கமிட்டு தமிழக அரசுக்கு மத்திய அரசுக்கும் கோரிக்கைகளை அனுப்ப இருக்கின்றோம்.தற்போது பலமுனை போட்டி

நடைபெற்று வரும் சூழ்நிலையில் நாங்களும் எங்களது வாக்கு வங்கி நிலைநாட்டும் பொழுது நிச்சயம் எங்களது ஆதரவு இல்லாமல் யாரும் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது எனபதுதான் எங்களுடைய நிலைபாடு.தமிழகத்தில் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட போயர் ஒட்டர் இன மக்கள் இருக்கின்றனர் எங்களது வாக்குகளை வைத்துதான் ஆட்சி அமைக்கின்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *