Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

யாரும் ஓட்டு கேட்டு வர வேண்டாம் – ப்ளக்ஸ் வைத்த மாநகர மக்கள்.

பாராளுமன்றத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் திருச்சி மாநகராட்சி 39 ஆவது வார்டுக்கு உட்பட்ட காட்டூர் கைலாஷ் நகர் அண்ணாசாலை பகுதியில் மாநகராட்சி சார்பில் சாலை போடுவதற்காக கொத்தி போடப்பட்டு 7 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது.

 ஆனால் சாலையை போடவில்லை இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும், பாதசாரிகள் சாலைகளில் சென்று வருவதற்கு பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை எடுத்துக் கூறியும் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலுக்காக அப்பகுதியில் வாக்கு சேகரிப்பதற்காக அரசியல் கட்சிகள் வருவார்கள் என்பதால் எங்கள் பகுதிக்கு யாரும் வாக்கு சேகரிக்க வர வேண்டாம். மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நாங்கள் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்கிறோம் எனக் கூறி மூன்று இடங்களில் பிளக்ஸ் பேனர்களை வைத்துள்ளனர்.

இச்சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் பொதுமக்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படையாக காட்டி வருகின்றனர் குறிப்பாக ஓட்டு கேட்க வரும் வேட்பாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவது, எங்கள் பகுதிக்கு வர வேண்டாம் என பிளக்ஸ் வைப்பது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் அரசியல் கட்சியினர் இடையே ஒரு பீதியை ஏற்படுத்தியுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *