தமிழகத்தில் உள்ள அம்மன் கோயில்களில் மிகவும் சிறப்பு பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோயில். அம்மனை தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பௌர்ணமி, அமாவாசை போன்ற தினங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசனம் செய்கின்றனர்.
மேலும் அமாவாசை, பௌர்ணமி தினங்களில் இரவில் கோயில் வளாகத்தில் தங்கி அதிகாலையில் அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள். இந்நிலையில் இந்த மாத பௌணர்மி இன்று 23ந் தேதி வெள்ளிக்கிழமை மாலை 04:55 மணிக்கு தொடங்கி நாளை 24ந் தேதி சனிக்கிழமை மாலை 06:51 மணிக்கு முடிகிறது.
எனவே இந்த நேரத்தில் பக்தர்கள் பௌணர்மி தரிசனம் செய்யலாம் என கோயில் இணை ஆணையர் கல்யாணி தகவல் தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments