Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருவரம்பூர் அருகே பிரபல ரவுடி தற்கொலை

திருவெறும்பூர் அருகே பிரபல முன்னாள் ரவுடி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பாப்பா குறிச்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் இவரது மகன் இளையராஜா (36) இவர் மீது திருவெறும்பூர் காவல் நிலையத்தில் ரவுடி வழக்கு உள்ளது.

தற்பொழுது குடிபோதைக்கு அடிமையாகி உள்ளார். இவருக்கு கனகா என்ற மனைவியும் இரண்டு பெண் குழந்தை மற்றும் ஒரு மகன் உள்ளனர்.இந்த நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான இளையராஜா எந்த வேலைக்கும் செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். இதனால் இளையராஜா விற்கும் கனகாவிற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கனகாவிற்கும் இளையராஜாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.இதனால் ஆத்திரமடைந்த கனகா தனது இரண்டு மகள்களை மட்டும் அழைத்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் மனைவி மற்றும் மகள்கள் பிரிந்து சென்றதால் தனது மகனுடன் இளையராஜா விரத்தியில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வீட்டில் பேன் மாட்டும் ஊக்கில் சேலை மூலம் இளையராஜா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இச்சம்பவம் பற்றி திருவெறும்பூர் போலீசாரிடம் கனகா புகார் செய்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருவெறும்பூர் போலீசார் இளையராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

 திருச்சி விஷன் செய்திகளை whatsapp மூலம் அறிய 

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

திருச்சி விஷன் செய்திகளை டெலிகிராம் ஆப் மூலம் அறிய 

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *