Thursday, August 14, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

கன்னியாகுமரி முதல் பல்வேறு மாநிலங்களுக்கு பிரச்சார பயணம் சென்று டெல்லியில் சாகும் வரை போராட்டம் – விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு அறிவிப்பு

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் திருச்சி மாவட்ட பொதுக்குழு கூட்டம் இன்று மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாய சங்க மாநில அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் விவசாயிகளின் தற்போதைய நிலை மற்றும் விவசாயிகளின் கோரிக்கைகளை அரசிடம் கொண்டு சேர்த்து நிறைவேற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டது.

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை எதிர்த்தும், அதனை வாபஸ் பெறக்கோரி டெல்லியில் 9மாதங்களாக போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக காந்திஜெயந்தியன்று கன்னியாகுமரி தொடங்கி கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா வழியாக காஷ்மீர் வரையிலும் பிரச்சார பயணமாகச் சென்று

பின்னர் டெல்லி வந்து அங்கு இச்சட்டங்களை வாபஸ் பெறும் வரை சாகும் வரை போராடப்போவது எனவும், காவிரியுடன் கோதாவரியை இணைக்க வேண்டும், விவசாயிகள் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் தீர்மாணம் நிறைவேற்றப்பட்டது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/C7dWGn2D61ELFrwqksYgdS

டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *