Wednesday, August 13, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

வீட்டிற்கு செல்லும் வழியில் முதியவர் திடீரென மாயம். தேடும் பணிகள் தீவிரம்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் விரகாலூர் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் பல்த்தசார் (65). இவருடைய மகன் அந்தோனிராஜ் (40). இவர் சமயபுரம் அருகே பணமங்கலம் பழைய சாலையில் வசித்து வருகிறார். மகன் வீட்டிற்கு வந்த பல்த்தசார் கடந்த 4 ந்தேதி மாலை மீண்டும் விரகாலுருக்கு செல்வதற்காக சென்றுள்ளார்.

அவருடைய மகன் அந்தோனிராஜ் நம்பர் 1 டோல்கேட்டில் இறக்கி விட்டுள்ளார். ஆனால் விரகாலுருக்கு செல்லாமலும் திரும்பி மகன் வீட்டிற்கு வராமலும் திடீரென மாயாமானார். இதனால் அதிர்ச்சியடைந்த மகன் அந்தோனிராஜ் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர்.

எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் கொள்ளிடம் காவல் நிலையத்தில் அந்தோனிராஜ் புகார் அளித்தார். புகாரின் பேரில் கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் மாயாமான முதியவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *