Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் 150 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் ஒருவர் கைது

தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை உள்ளிட்டப் பொருட்கள் கள்ளச் சந்தையில் விற்க கூடாது என்று தொடர்ந்து காவல்துறையினரால் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருச்சி பாலக்கரை மற்றும் காந்தி மார்க்கெட் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தனிப்படை காவலர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது பாலக்கரை காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் எடத்தெரு, காஜா பேட்டை, செங்குளம் காலானி ஆகிய பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை விற்பனை செய்து வந்த முத்தரசநல்லூர் பகுதியை தர்மலிங்கம் (வயது 46) என்பவரை தனிப்படை போலீசாரால் கைது செய்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 150 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *