Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சியில் ஒருநாள் மட்டும் உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல்

திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் சித்திரைத் தேர்த் திருவிழாவினை முன்னிட்டு (19.04.2022) செவ்வாய்க் கிழமையன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.

திருச்சி மாவட்டத்திலுள்ள தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் இது பொருந்தும். ஆயினும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தோ்வுகள் நடைபெறுவதில் இந்த விடுமுறை பொருந்தாது.. இவ்விடுமுறையினை ஈடு செய்யும் பொருட்டு (30.04.2022) சனிக்கிழமையன்று
பணிநாளாக செயல்படும்.

மேற்கண்ட விடுமுறை நாளில் அரசு பாதுகாப்பு தொடர்பான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்கள், கருவூலங்கள் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளா்களைக் கொண்டு செயல்படும். மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *