Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சி மாவட்டத்திற்கு ஒருநாள் உள்ளூர் விடுமுறை ஆணை – மாவட்ட ஆட்சியர் தகவல்.

திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நாளான சொர்க்கவாசல் திறப்பு (பரமபத வாசல் திறப்பு) நடைபெறும் பொருட்டு திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு (10.01.2025) (வெள்ளிக் கிழமை) அன்று உள்ளூர் விடுமுறை வழங்கியும்,

இவ்விடுமுறையினை ஈடுசெய்யும் வகையில் ஏற்கனவே கடந்த (25.01.2025) (சனிக்கிழமை) அன்று பணி நாளாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு எதிர்வரும் (17.01.2025) அன்று அரசு விடுமுறை நாளாகவும், அவ்விடுமுறையினை ஈடுசெய்யும் வகையில் (25.01.2025) (சனிக்கிழமை) அன்று பணி நாளாகவும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, (10.01.2025) (வெள்ளிக்கிழமை) அன்று அறிவிக்கப்பட்ட உள்ளூர் விடுமுறையினை ஈடுசெய்யும் வகையில், திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு எதிர்வரும் (01.02.2025) அன்று பணி நாளாக அறிவித்து ஆணையிடப்படுகின்றது என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *