Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

அண்ணாவின் பிறந்தநாளை கொண்டாட அதிமுகவிற்கு மட்டுமே தகுதி உள்ளது – திருச்சி முன்னாள் எம்.பி பேச்சு.

மணப்பாறையில் மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் முன்னாள் எம்எல்ஏக்கள் சந்திரசேகர், சின்னசாமி, பொதுக்குழு உறுப்பினர் டாக்டர் இஸ்மாயில், நெட்ஸ் இளங்கோ, நகர செயலாளர் ராமமூர்த்தி, ஒன்றிய செயலாளர் அன்பரசன், ராமச்சந்திரன், கவுன்சிலர்கள் ராமன், சோனா எத்திராஜ், கொளசிக், சண்முகப்பிரபாகரன், ராஜா, சுரேஷ் உள்ளிட்ட பலர் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

அப்போது முன்னாள் எம்பி குமார் பேசுகையில்., அண்ணாவின் பிறந்தநாளை கொண்டாட அதிமுகவிற்கு மட்டுமே தகுதி உள்ளது. அண்ணா உருவாக்கிய இயக்கத்தை கருணாநிதி குடும்பம் புகுந்து, மன்னர் ஆட்சி ஒழிக்கப்பட்ட பிறகும் ஸ்டாலின் அவரது மகன், பேரன் என்று பரம்பரை பரம்பரையாக ஆண்டு கொண்டு அண்ணா கொள்கையை குப்பையில் போட்டுவிட்டனர். 

ஆட்சியில் இருக்கிற திமுக சர்வாதிகாரப் போக்குடன் நடந்து வருகிறது. அமைச்சர் நேரு மற்றும் அவரது தொண்டர்களும் பணபலம், அதிகார பலத்தையும் கையில் வைத்துக்கொண்டு செயல்பட்டு வருகின்றனர். இது நிரந்தரம் இல்லை மக்களும், இறைவனும் உங்கள் அதிகாரத்தை பறிக்கும் காலம் விரைவில் வரும் இவ்வாறு பேசினார். 

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…    https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6sa

#டெலிகிராம் மூலமும் அறிய….. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *