Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட்! அட மழைக்கு இல்லங்க…வெயிலுக்கு!!!

திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் என்ன செய்வதென்று தெரியாமல் திணறி வருகின்றனர்

சென்னையை ஓவர் டேக் செய்யும் அளவுக்கு திருச்சி மாவட்டம் வெயிலிலும் இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக வெயில் சதம் அடித்து வந்த நிலையில் 100 டிகிரி செல்சியசையும் தாண்டி வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதனால் வீட்டில் இருக்கும் குழந்தைகள் அனைவரும் என்ன செய்வதென்று தெரியாமல் திணறி வருகின்றனர். இவ்வாறு இருக்க இன்று திருச்சி மாவட்டத்தில் வெயிலின் அளவானது சுமார் 105 டிகிரி வரை தொடலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக மக்கள் எச்சரிக்கையாக இருக்க ஆரஞ்ச் அலர்ட்டானது வழங்கப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்கள் மதிய நேரத்தில் வெளியில் வராமல் இருக்க வேண்டும் எனவும் அவ்வாறு வெயிலில் வந்தாலும் குடிநீர் போன்றவற்றை எடுத்து செல்ல வேண்டும். இது தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர்கள் கூறுகையில், திருச்சி மாவட்டத்தில் நாளை 104 டிகிரி முதல் 105 டிகிரி வரை வெயிலின் தாக்கமானது இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மக்கள் அனைவரும் தேவையில்லாமல் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். மதியம் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் யாரும் வெயிலில் வேலை செய்ய வேண்டாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெயில் கொளுத்தி வருவதால் மக்கள் மோர் மற்றும் ஜூஸ் கடைகளை நாடி குவிந்து வருகின்றனர். மேலும் தர்பூசணி வியாபாரமும் திருச்சி மாவட்டத்தில் சூடு பிடித்துள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *