Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

நாடாளுமன்ற தேர்தல் – திருச்சியில் வேட்பாளர் அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தல் 2024 தேதி விரைவில் தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. இதன் நிலையில் தமிழகத்தில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடுவதற்கு அரசியல் கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் சுயட்சை வேட்பாளராக போட்டியிட தமிழ்நாடு நாயுடு நல சங்க கூட்டமைப்பு பொதுச் செயலாளர் ரெங்கராஜ் தெரிவித்தார்.

திருச்சி மாவட்டம் துறையூர் தனியார் திருமண மண்டபத்தில் இன்று வேட்பாளர் அறிமுகம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட தமிழ்நாடு நாயுடு சங்க கூட்டமைப்பு பொது செயலாளர் ரங்கராஜ் போட்டியிடுவதை உறுதி செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.

கூட்டத்தில் பேசிய அவர்……பிரிந்து கிடக்கும் நாயுடு சமூகங்கள் ஒன்று சேர்ந்தாலே பாராளுமன்ற தொகுதியை நாம் படிக்கலாம் என்றும், தான் தனித்து போட்டியிடுவதாகவும், எந்த மாநில மற்றும் தேசிய கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்றும் கூறினார். தனது நாயுடு சங்க கூட்டமைப்பு அமைப்பின் சார்பாக துறையூர் பகுதியில் ரயில் வழிதடத்தை விரைவில் கொண்டு வருவோம் என்று கூறினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *