வக்பு வாரிய சட்டம் நிறைவேற்றியது தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரானது.மத்திய அரசின் வக்பு வாரிய சட்ட திருத்தத்தை கண்டித்துவரும் 8ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் – திருச்சி விமான நிலையத்தில் எழுச்சித் தமிழர் தொல் திருமாவளவன் பேட்டி
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம், காட்டத்தூரில் உள்ள பள்ளியின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமா விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று நிறைவடைந்துள்ளது.இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இது ஒரு கருப்பு தினம் இன்று சொல்ல கூடிய அளவுக்கு வஃக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை பாஜக அரசு கொண்டு நிறைவேற்றி உள்ளது.இது இஸ்லாமியர்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கை. ஆளும் பிஜேபி அரசு தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிராக இதனை அரங்கேற்றி உள்ளனர்.
வேறு எந்த மதத்தின் சொத்து விவகாரங்களில் தலையிடாத மத்திய அரசு வக்பு வாரியத்தில் அடாவடித்தனமாக தலையிடுகிறது.வக்பு வாரியத்தில் முஸ்லிம் அல்லாத நபர்களை நியமிப்பதற்காக சட்ட திருத்தை கொண்டு வந்துள்ளனர்.இதற்கு BJP வெளிப்படை தன்மை எனக் கூறுகின்றனர்.பௌத்த மதத்தில் புத்த விகாரில் பௌத்தர் அல்லாதவர்களை நியமித்து இன்று வரை நடைமுறைப்படுத்த வருகின்றனர்.
இதனை எதிர்த்து புத்த பிட்சுகள் போராடி வருகின்றனர்,மத்திய அரசின் இந்த மத விரோத போக்கை விடுதலை சிறுத்தை கட்சிவன்மையாக கண்டிக்கிறது.மத்திய அரசின் வக்பு வாரிய சட்ட திருத்தத்தை கண்டித்து வரும் 8ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. தொடர்பாகஉச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர் உள்ளோம்.வாக்காளர்கள் திருத்த சட்டத்திற்கு எதிர்த்து வாக்களித்துள்ளோம்.மாநிலங்கள் அவையில் 95 பேர் எதிர்த்து வாக்களித்துள்ளோம்.தமிழகத்தில் அதிமுகவும் எதிர்த்து வாக்களித்தது ஆறுதல் அளித்துள்ளது.கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு BJP இதனை சாதித்திருக்கிறார்கள் .அரசியல் காரணங்களுக்காக கூட்டணி கட்சிகளும் பாஜகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற தீர்மானத்தை தமிழக அரசு நிறைவேற்றி உள்ளது.பிரதமர் மோடிஇலங்கை பயணம் தமிழ்நாட்டு மீனவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்.மோடி இது குறித்து பேசுவார் என எதிர்பார்க்கிறோம்.நீட் மசோதாவை மீண்டும் குடியரசுத் தலைவர் நிராகரித்திருப்பது அதிர்ச்சியையும் வேதனையும்
அளிக்கிறது.இந்த சூழலில் 9ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்தினை தமிழக முதல்வர் கூட்டி உள்ளார்.அவரது முயற்சிக்கு ஆதரவளிக்க தயாராக உள்ளோம்.நீட் விவகாரத்தில் அரசியல் காரணங்களை முன்னிறுத்தாமல்அனைத்து கட்சிகளும் ஓரணியில் ஒன்று திரள வேண்டும்.திமுக அரசு பதவி ஏற்ற காலத்தில் இருந்து நீட் எதிர்ப்பை முழு மனதோடு கடைபிடித்து வருகிறது.அவ்வாறுமுயற்சி எடுக்காமல் இருந்தால் வாக்குறுதி காற்றில் பறக்க விட்டார்கள் என கூறலாம்.
விமர்சிக்கப்பட வேண்டியவர்கள் மத்திய ஆட்சியாளர்கள் தான்.தமிழக ஆட்சியாளர்கள் மீது விமர்சனம் செய்வது வேடிக்கையாக உள்ளது.இந்தியாவிலேயே தமிழகம் தான் பள்ளிக்கல்வித்துறையில் சிறந்து விளங்கி வருகிறது.மரத்தடி வகுப்புகள் இன்றும் நடக்குமானால்அதற்கு உடனடியாகஉரிய தீர்வு காணப்பட வேண்டும்.பள்ளி வகுப்பறை எண்ணிக்கைகளை பெருக்க வேண்டும்.
வக்பு வாரிய திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதை கண்டித்து பீகாரில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகி உள்ளனர் இது கூட்டணி கட்சிகளுக்கு பெரிய சவுக்கடி என தெரிவித்தார்.பேட்டின் போது திருச்சி மாவட்ட செயலாளர்கள் புல்லட்லாரன்ஸ் கனியமுதன் சக்தி ஆற்றல் அரசு குரு அன்புச்செல்வன் மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments