Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த  சீகம்பட்டிஊராட்சி பாரதியார் நகரில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் , இந்தப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக பாரதியார் நகரில் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது, இந்நிலையில் மேல் நீர்த்தேக்க தொட்டி பழுதடைந்ததால் அதை இடித்துவிட்டு புதிதாக சுமார் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்த தே க்க தொட்டிகட்டப்பட்டது,

கட்டி முடித்து 4 மாத காலமாக பயன்பாட்டுக்கு வராததால் பொதுமக்கள் ஊராட்சி மன்ற  நிர்வாகத்திற்கும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கும் பலமுறை கோரிக்கை விடுத்தனர், ஆனாலும் நடவடிக்கை இல்லாத காரணத்தால் 

இன்று பாரதியார் நகரில் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்,சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த சாலை மறியலில் பொதுமக்களுடன் காவல் துறையினர் ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள், ஊராட்சி மன்றத்தின் சார்பில் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.

பேச்சுவார்த்தையின் முடிவில் ஒரு வார காலத்திற்குள் புதிதாக கட்டப்பட்ட டேங்கில் பைப்லைன் கொடுத்து தண்ணீர் வினியோகம் செய்யப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர் .இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலில் கைவிட்டனர் இந்த சாலை மறியலால் மணப்பாறை புதுக்கோட்டை சாலைகள் சுமால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

# திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

 

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *