Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையரை மாற்றம் செய்ய கோரி திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு

திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையராக பணிபுரிந்து வருபவர் மாரிமுத்து. இந்த நிலையில் இடமாற்றம் செய்ய கோரி அரங்கன் பாதுகாப்பு பேரவையினர், திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

பின்னர் இதுக்குறித்து திருச்சி அரங்கன் பாதுகாப்பு பேரவை செயலாளர் சேது அரவிந்த் கூறுகையில்… ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ராமானுஜர் நியமிக்கப்பட்ட வைணவ குருமார்கள் ஆயிரம் ஆண்டுகளாக கைங்கர்ய பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

பஞ்சாங்கம் படிப்பது, வேத விண்ணப்பம் செய்வது, ஆழ்வார்களின் தமிழ் பாசுரங்களை படிப்பது போன்ற கைங்கர்ய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுடைய பணிக்கு இடையூறாகவும் அவர்களை வெளியேற்றும் விதமாக கோவில் இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள மாரிமுத்து செயல்பட்டு வருகிறார்.

கோவிலில் கட்டண தரிசன வசூலில் இலக்கை அடைய வேண்டும் என்பதற்காக, பூஜை மரபுகளை மீறி செயல்பட்டு வருகிறார். அவரது செயல்பாடுகளை கண்டித்தும், தொடர் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் விதமாக,தமிழக அரசு அவரை இடம் மாற்றம் செய்ய வேண்டும், என்று மாவட்ட கலெக்டர் வாயிலாக மனு கொடுக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *