திருச்சி, கரூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இயங்கி வந்த அரசு மணல் குவாரிகள் அனைத்தும் கடந்த ஏப்ரல் மாதம் முதல் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் பல்வேறு வகையான கட்டுமானப்பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த தொழிலையே நம்பி இருக்கும் லாரி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதனால் அவர்களிடம் பணியாற்றும் லாரி ஓட்டுனர்கள், கிளினர்கள் ஆகியோரும் எந்த வித வருமானமின்றி அவதியுற்று வருகின்றனர். வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் சில லாரி ஓட்டுனர்கள் தற்கொலை செய்தும் கொண்டுள்ளனர்.
இது தவிர மணல் குவாரிகள் மூலம் அரசுக்கு சுமார் 200 கோடி ரூபாய் வரை வருமானம் கிடைக்கும் தற்போது மணல் குவாரிகள் இயங்கப்படாமல் உள்ளதால் ஒரு சில சமூக விரோதிகள் திருட்டுத்தனமாக மணல் அள்ளுகின்றனர்.
இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே லாரி உரிமையாளர்கள், ஓட்டுனர்கள் ஆகியோரின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் அரசு வருமானம் ஈட்டும் வகையிலும் இயங்கப்படாமல் உள்ள மணல் குவாரிகளை உடனடியாக மீண்டும் இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் மாநில தலைவர் செல்ல.ராஜாமணி தலைமையில் அச்சமேளணத்தை சேர்ந்தவர்கள் திருச்சியில் உள்ள பொதுப்பணி துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
Comments