Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கேட்டு திருச்சி ஆட்சியரிடம் மனு!!

தமிழகத்தில் கடந்த 8 மாதங்களாக கொரோனா நோய் தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு படிப்படியாக தளர்வுகள் தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று தமிழகம் முழுவதும் பூங்காக்களை திறக்க அரசு அனுமதி அளித்திருந்தது.

Advertisement

தை மாதம் பொங்கல் பண்டிகை வர இருப்பதையொட்டி தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடைபெறுமா என்ற மிகப்பெரிய கேள்விக்குறி எழுந்துள்ளது. ஜல்லிக்கட்டு குறித்து தமிழக அரசு சார்பில் இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடாத சூழ்நிலையில் காளை வளர்ப்பவர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் மத்தியில் கலக்கம் எழுந்துள்ளது.

Advertisement

இந்நிலையில் திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு என்பது பிரபலமானது. தை மாதம் இரண்டாம் தேதி(15/01/2021) அன்று ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக் கோரி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

திருச்சி சூரியூர் பொதுமக்கள் சார்பில் கிராம பட்டயதாரர்கள் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி மனு வழங்கினர்.

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *