Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

குறைந்த விலையில் தக்காளி கிடைக்கும் இடங்கள்- ஆட்சியர் அறிவிப்பு

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகள் மற்றும் தோட்டக்கலை விற்பனை நிலையம் மூலமாக வெளி சந்தைகளை விட குறைவான விலையில் தக்காளி விற்பனை செய்யப்படுவதை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு அரசின் சீரிய நடவடிக்கையின் காரணமாக வெளிசந்தையில் அதிக விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்படுவதை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இ-சந்தை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து விவசாயிகளிடமிருந்து தக்காளி நேரடி கொள்முதல் செய்யப்பட்டு

அண்ணாநகர், கே.கே.நகர் உழவர் சந்தைகளிலும், மன்னார்புரம், மாவட்ட ஆட்சியர் வளாகம் மற்றும் தோட்டக்கலை விற்பனை நிலையம், திருவானைக்கோவில் ஆகிய இடங்களிலும் விற்பனை செய்யப்படவுள்ளது.

எனவே பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த வாய்ப்பினை பயன்படுத்தி குறைந்த விலையில் தக்காளி வாங்கி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *