Thursday, August 14, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

விவசாயிகள் நடத்தி வரும் உண்ணாவிரத போராட்டத்திற்குள் நுழைந்த விஷ பாம்பு

மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், விவசாய விளைப்பொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தர வேண்டும், மழையினால் அழிந்து வரும் 10 இலட்சம் நெல் மூட்டைகளை அரசு உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும், உத்திர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம் திகுன்னியா அருகில் பன்வீர்பூர்-ரில் விவசாயிகளை கொன்றவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் திருச்சி அண்ணாமலை நகர், மலர் சாலையில் 12.10.2021 முதல் 26.11.2021 வரை 46 நாட்கள்  உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்து 02.11.2021 செவ்வாய்கிழமை இன்று 22ம் நாளான இன்று மத்திய மோடி அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்காமல் விவசாய விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தருகிறேன் என்று கூறிவிட்டு, அவ்வாறு தராமலும்,

இந்தியாவின் முதுகெலும்பு விவசாயிகள் என்று கூறிவிட்டு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்காமல விவசாயிகளுக்கு முக்காடு போட்டுவிட்டார் என்பதை சுட்டிக்காட்டி நூதன  உண்ணாவிரதம் போராட்டம் துவங்கினர். அப்போது விவசாயிகள்  உண்ணாவிரதம் இருக்கும் இடத்தின் அருகே  பெரிய அளவிலான கண்ணாடிவிரியன் பாம்பு புதரில் இருந்து வெளியில் வந்தது.

இதனை கண்ட விவசாயிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த வனத்துறை மீட்புக்குழுவினர் புதரில் மறைந்திருந்த 4 அடி நீளமுள்ள கண்ணாடிவிரியன் பாம்பை பிடித்து சென்றனர். 

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW

டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/Trichyvision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *