Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

பொங்கல் பரிசு ரூ.2500 – திருச்சியில் டோக்கன் வினியோகம்!!

திருச்சி மாவட்டத்தில் 1224 நியாயவிலைக் கடைகளில் உள்ள 8,14,833 குடும்ப அட்டைகளில், 7,95,000 அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகை ரூ 2,500 பொருட்கள் பெறுவதற்கான டோக்கன் காலை 9 மணி முதல் கொடுக்கபடுகிறது. 

Advertisement

ஊழியர்கள் ஒருவருக்கு 1000 முதல் 1200 நபர்களுக்கான டோக்கன்களை வினியோகிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 26ம் தேதி இன்று துவங்கி 30ம் தேதி வரை டோக்கன்கள் வழங்கப்படும். பொருட்கள் வரும் ஜனவரி நான்காம் தேதியிலிருந்து 12ம் தேதி வரை வழங்கப்படும். பொருட்கள் வாங்காமல் விடுபட்டவர்கள் 13ஆம் தேதி பொங்கல் பரிசுத் தொகையுடன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். 

Advertisement

நியாய விலை கடை மற்றும் கூட்டுறவு துறையில் பணியாற்றும் ஊழியர்கள் 950 பேர் டோக்கன் விநியோகிக்கும் பணியில் ஈடுபட உள்ளனர்.திருச்சி மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 199 கோடி ரூபாய் பொங்கல் பரிசுத்தொகையாக ரொக்கமாக வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் திருச்சி மாவட்டத்தில் சர்க்கரை காடுகள் 24 ஆயிரம் பேர் வைத்திருந்தனர். அதில் 9,000 பேர் தற்பொழுது அரிசி அட்டைதாரர்களாக மாறி உள்ளனர் என மாவட்ட வட்ட வழங்கல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *