Thursday, August 21, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

நாளை(09.01.2022) நடைபெறவிருந்த டிஎன்பிஎஸ்சி தேர்வு மட்டும் ஒத்திவைப்பு

இந்திய அளவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் மிக வேகமாக பரவிவருகிறது. இந்திய அளவில் நாள் ஒன்றுக்கு கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது. தமிழ்நாட்டிலும் கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் உள்ளது. கடந்த இரு தினங்களில் யாரும் எதிர்பாராத உச்சத்தை எட்டியுள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு அதைவிட கூடுதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், கொரோனா பாதிப்பு அதிகரித்ததைத் தொடர்ந்து தமிழ்நாடு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

அதன் ஒரு பகுதியாக வரும் (09.01.2022)ஞாயிறன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமையன்று அத்தியாவசிய சேவைகளைத் தவிர்த்து வேறு எந்த தொழிலும் நடைபெறக் கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறவிருந்த டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் குறித்த கேள்வி எழுந்தது.

முன்னதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வாணையத்தினால் தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சார்நிலை பணிகளில் அடங்கிய கட்டிடக்கலை, திட்ட உதவியாளர், ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலை பணிகளுக்கு 8ஆம் தேதி (சனிக்கிழமை) மற்றும் 9ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை மற்றும் பிற்பகலில் எழுத்துத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

 ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிப்பின் காரணமாக இந்த தேர்வுகள் குறித்த கேள்வி எழுந்தது. இதுகுறித்து நேற்று விளக்கமளித்த டி.என்.பி.எஸ்.சி திட்டமிட்டபடி தேர்வு நடைபெறும் என்று அறிவித்தது.
ஆனால், தற்போது தேர்வை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி கிரண் குராலா வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘வரும் 9-ம் தேதி நடைபெறவிருந்த ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு வரும் 11-ம் தேதி நடைபெறும். ஏற்கனவே வெளியிடப்பட்ட ஹால் டிக்கெட்டைப் பயன்படுத்தி தேர்வர்கள் 11-ம் தேதி நடைபெறவுள்ள தேர்வை எழுதலாம். நாளை நடைபெறவுள்ள கட்டடக்கலை, திட்ட உதவியாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பொது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே 09.01.2022 அன்று நடைபெற இருந்த தேர்வானது 11.01.2022(செவ்வாய்க்கிழமை) அன்று முற்பகல் (10.00 முதல் 01.00 வரை) பிற்பகல் (03.00 முதல் 05.00 வரை) வரை நடைபெற உள்ளது. மேற்கண்ட தேர்வு நடைபெறும் 14 தேர்வு மையங்களுக்கும் தேர்வினை நடத்தும் பொருட்டு சிறப்பு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 3696 நபர்கள் இத்தேர்வினை எழுதவுள்ளனர்.

இத்தேர்விற்கு 14 முதன்மைக் கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இப்போட்டிந் தேர்வு வினாத்தான் மற்றும் விடைத்தாள்களை தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியினை மேற்கொள்ள 4 இயங்குக்குழு (Mobile Unit) அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவிற்கு துணை வட்டாட்சியர் நிலையில் ஒரு அலுவலர், ஆயுதம் ஏந்திய ஒரு காவலர் மற்றும் ஒரு வருவாய் உதவியாளரும் இயங்குவர். மேலும் தேர்வு மையங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் 14 அரசு தேர்வாணைய 14 தேர்வு கூட ஆய்வு அலுவலர்களும், 14 வீடியோகிராபர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தால் வழங்கப்பட்டுள்ள கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தேர்வு மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேர்வு மையத்தில் காவல்துறை மூலம் பாதுகாப்பு பணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வாளர்கள் தேர்வு மையங்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. 

தேர்வு எழுத வரும் தேர்வாளர்கள் செல்லிடை பேசி உள்ளிட்ட எவ்வித மின்னணு சாதனங்களும் தேர்வு மையங்களுக்கு எடுத்து வர அனுமதி இல்லை என தேர்வாணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0

#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *