Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி மாநகராட்சியில் 22 பணியாளர்களுக்கு பதவி உயர்வு –

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றிய 22 பணியாளர்களுக்கு  நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பதவி உயர்வுக்கான ஆணைகளை வழங்கினார்.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் மாநகராட்சி பணியாளர்களில் உதவி வருவாய் அலுவலர் பணியிடத்தில் பணிபுரிந்து வருபவர்களில் ஒருவருக்கு வருவாய் அலுவலர் ஆக பதவி உயர்வு செய்தும், உதவியாளர் பணியிடத்தில் பணிபுரிந்து வருபவர்களில் 11 பணியாளர்களுக்கு கண்காணிப்பாளர் ஆக பதவி உயர்வு செய்தும், இளநிலை உதவியாளர் பணியிடத்தில பணிபுரிந்து வரும் 10 பணியாளர்களுக்கு உதவியாளர் ஆக பதவி உயர்வு செய்யப்பட்டு அதற்கான ஆணைகளை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.

இந்நிகழ்வில் மேயர் மு. அன்பழகன், ஆணையர் மரு. இரா.வைத்திநாதன், துணை மேயர் ஜி. திவ்யா, நகரப் பொறியாளர் பி.சிவபாதம், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *