நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழகம் முழுவதும் இன்று இந்திய மாணவர்கள் சங்கம் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் உருமு தனலெட்சுமி கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கத்தைச் சார்ந்த மாணவர்கள் நீட் தேர்வு ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கண்டன வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியும், மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் திருச்சி மாவட்ட தலைவர் மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments