திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள ஒக்கரை கிராமத்தில் நேற்று இரவு பெய்த கனமழையால் மழை நீர் வெளியேற வழி இல்லாமல் தேங்கியிருந்த நீரை வெளியேற்ற வழியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
இதனை அறிந்த ஒன்றி செயலாளர் முத்துச்செல்வன் சாலை மறியலில் ஈடுபட சென்றவர்களை சமாதானம் பேசி தேங்கி இருந்த நீரை வெளியேற்றும் பணியினை தொடங்கி வைத்தார். இதனால் சாலை மறியல் கைவிடப்பட்டது. மேலும் கனமழையால் இரவு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் ஒக்கரை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments