Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

திருச்சியில் ஐந்து நாட்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை – மாவட்ட ஆட்சியர் தகவல்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், அணியாப்பூர் கிராமம், வீரமலைப் பாளையத்தில் உள்ள துப்பாக்கி சுடும் இடத்தில், (01.10.2024) ஆம் தேதி முதல் (05.10.2024) ஆம் தேதி வரை காலை 7:30 மணி முதல் மாலை 5:30 மணி வரையும், மாலை 07:00 மணி முதல் இரவு 10:00 மணி வரையும் ATC, CRPF, Pallipuram, Thiruvananthapuram Group Unit துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற உள்ளது.

இதனால், அச்சமயம் மேற்கண்ட பயிற்சி தளத்தில் மேய்ச்சலுக்காக கால்நடைகள் மற்றும் மனித நடமாட்டம் எதுவும் இருக்கக் கூடாது எனவும், மேலே குறிப்பிட்டுள்ள பயிற்சி தளத்தில் எவரும் பிரவேசிக்கக் கூடாது என திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *