Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

தள்ளுமுள்ளு, வாக்குவாதம் – இந்து முன்னணி அமைப்பினர் கைது

தமிழகத்தில் உள்ள இந்து கோயில்களில் இருந்து, இந்து சமய அறநிலையத்துறை வெளியேற வேண்டும் என வலியுறுத்தி, திருச்சி திருவானைக்காவலில் அருகே இந்து முன்னணி அமைப்பினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட50க்கும் மேற்பட்ட இந்து முன்னணி அமைப்பினரை, ஸ்ரீரங்கம் போலீசார் குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர். இதனால் இந்து முன்னணி அமைப்பினருக்கும் காவல்துறையினருக்கும் தள்ளுமுள்ளு மற்றும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு.

இதே போன்று திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் கல்லக்குடியில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சாமி சண்முகம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தனவேல் முன்னிலை வகித்தார்.

 தலைமை பேச்சாளர் பாண்டியன் மற்றும் ஆட்டோ தொழிலாளர் முன்னணி மாவட்ட தலைவர் மற்றும் ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இந்து முன்னணி நிர்வாகிகளை கல்லக்குடி போலீசார் கைது செய்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *