Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சியில் ரஜினிக்கு ரசிகர்கள் புதிய கொடி அறிமுகம் பரபரப்பு

சூப்பர் ஸ்டார் என உலகமெங்கும் உள்ள ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது திரைப்படம் வெளியீடு என்றாலே அவரது ரசிகர்களுக்கு ஒரு திருவிழாவை போன்றதாகத்தான் இருக்கும். அந்த வகையில் அவரது நடிப்பில், அவருடைய மகள் ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் உருவான ‘லால் சலாம்’ படம் இன்று (பிப்.9) வெளியாகியுள்ளது. அதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல திரையரங்குகளில் ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, திருச்சியில் லால்சலாம் படத்தை பார்க்க, புதிய கொடியுடன் வந்த ரஜினி ரசிகர்கள். ரஜினியின் மகள் ஐஸ்வர்யா உருவம் பதித்த கொடியில் “சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்” என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. சிகப்பு, மஞ்சள், பச்சை வண்ணங்களுடன் கூடிய கொடியை ஏந்தி வந்த ரசிகர்களால் கட்சி தொடங்க முன்னோட்டமா? என்ற கேள்வி எழுகிறது. சில நாட்களுக்கு முன்பு நடிகர் விஜய் கட்சி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு கட்சியின் பெயர் அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், நீண்ட நாட்களாக ரஜினி ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த ரஜினியின் அரசியல் வருகைக்கு இது ஒரு முன்னோட்டமாக இருக்குமா என்று கேள்வியும் எழுந்துள்ளது. இசை வெளியீட்டு விழா மேடையில் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா தனது தந்தையை சங்கி என்று அழைப்பது குறித்து கருத்து கூறிய இந்த நிலையில் அவரது புகைப்படம் ஏந்திய கொடியால் பரபரப்பு ஏற்பட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *