Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

மணல் ரீச்சை திறக்க கோரி பேரணி – மனு

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் செயல்பட்டு வந்த மணல் ரீச்சிலிருந்து மாட்டு வண்டி மூலமாக மணலை அள்ளி பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லும் மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். தற்பொழுது மணல் ரீச்சுகள் திருக்கப்படாததால் கடந்த ஆறு மாதத்திற்கு மேலாக வேலை இல்லாமல் உள்ளனர்.

இதனால் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு தலையிட்டு மணல் ரீச்சுகளை திறக்க வேண்டும் என வலியுறுத்தி மாட்டுவண்டி ஓட்டும் தொழிலாளர்களுடன் சிஐடியு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்பாட்டம் நடைபெற்றது. பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மணல் ரீச்சுகளை திறந்தால் மட்டுமே

திருச்சி மாவட்டத்தில் இந்த தொழிலை நம்பி பிழைப்பு நடத்தி வரும் சுமார் 2000-க்கும் அதிகமான மாட்டு வண்டி ஓட்டும் தொழிலாளர்களின் வாழ்வாரம் பாதுகாக்கப்படும் என்றும் இதன் மீது உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெஸ்ட்ரி பள்ளியில் இருந்து பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *