திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில் நல்லிணக்க நாள் உறுதி மொழியினை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று அனைத்து அரசுத்துறை அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர் இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி உள்ளிட்ட அரசுத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் தலைமையில் இன்று உறுதிமொழி ஏற்கப்பட்டது மாநகராட்சி துணை மேயர் திவ்யா, செயற்பொறியாளர்கள் குமரேசன், பாலசுப்பிரமணியன் மற்றும் மாநகராட்சி அலுவலர்களும் பணியாளர்களும் கலந்துகொண்டனர்.
அதனைப்போன்று திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலும் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…
https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments