Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் நல்லிணக்கநாள் உறுதிமொழி ஏற்பு

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில், நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் நல்லிணக்க நாள் உறுதி மொழியினை எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் த.பழனிகுமார், அலுவலக மேலாளர்கள் சிவசுப்ரமணியம்பிள்ளை, (பொது) தமிழ்கனி (குற்றவியல்) பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் ஸ்ரீதர் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர். 

உறுதிமொழி நான் சாதி, இன, வட்டார, மத அல்லது மொழி பாகுபாடு எதுவுமின்றி, இந்தியாவின் அனைத்து மக்களின் உணர்வுபூர்வ ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் பாடுபடுவேன் என்று உளமார உறுதிமொழி எடுத்துக் கொள்கிறேன். மேலும், எங்களுக்கிடையேயான அனைத்து வேறுபாடுகளையும், வன்முறையில் ஈடுபடாமல், பேச்சு வார்த்தைகள் மூலமாகவும் அரசியலமைப்புச் சட்ட வழிமுறைகளைப் பின்பற்றியும் தீர்த்துக் கொள்வேன் என்று உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

திருச்சி மாநகராட்சி ஆணையர் ப.மு.நெ.முஜிபுர் ரகுமான் தலைமையில் முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு நல்லிணக்க நாள் உறுதிமொழி மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் எடுத்துக்கொண்டார்கள். இந்தநிகழ்ச்சியில் உதவிஆணையர்கள் ச.நா.சண்முகம், செ.பிரபாகரன், எஸ்.திருஞானம், மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் நல்லிணக்க நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டார்கள்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/Efyz91DMUiEK0NHbCDuGqJ

டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *