Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

போக்குவரத்து காவலர்களுக்கு குளிர்பானம்

 திருச்சி மாநகரில் பணிபுரியும் போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்குபழச்சாறு மற்றும் குளிர்பானம் வழங்கும் திட்டத்தை திருச்சி மாநகர காவல் ஆணையர்  தொடங்கி வைத்தார்கள்

திருச்சி மாநகர காவல் ஆணையர் M.சத்தியப்பிரியா, எதிர்வரும் கோடை காலங்களில் திருச்சி மாநகர காவல் ஆளிநர்களின் உடல்நலம், ஆரோக்கியத்தை காத்திட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

அதன்படி,  (02.03.2023) தஞ்சாவூர் ரோடு பால்பண்ணை ஜங்சனில் உள்ள போக்குவரத்து சந்திப்பில் பணிபுரியும் போக்குவரத்து காவல் ஆளிநர்கள் கோடை காலங்களில் பணிபுரியும் போது சேர்வடையாமலும், புத்துணர்ச்சியுடன் பணிபுரியும் வகையில் பழச்சாறு மற்றும் குளிர்பானம் வழங்கும் நிகழ்ச்சியை திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் தொடங்கிவைத்தார்கள். மேலும் கோடைகாலங்களில் போக்குவரத்து காவல் ஆளிநர்களின் தங்களது உடல்நலனைபேணிக்காத்திட அறிவுரைகள்வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில் காவல் துணை ஆணையர் வடக்கு மற்றும் தெற்கு, போக்குவரத்து காவல் உதவி ஆணையர் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

மேலும்கோடை காலம் முழுவதும் போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கு பழச்சாறு மற்றும் குளிர்பானம் தொடர்ந்து வழங்கப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர்  தெரிவித்துள்ளார் .

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்ஆப் மூலம் அறிய

  https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

 

 

#டெலிகிராம் மூலமும் அறிய….  https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *