Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

6 மாதங்களுக்கு முன்பு திருமணமான பெண் செவிலியர் பணியிலிருந்த போது மரணம்- இறப்பில் சந்தேகம் போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் ராப்பூசல் பகுதியை சேர்ந்தவர் உமா (20). இவர் திருச்சி தில்லைநகரில் உள்ள மகாத்மா கண் மருத்துவமனை மகளிர் விடுதியில் தங்கி 3ம் ஆண்டு பயிற்சி செவிலியர் படிப்பை படித்தும், வேலையும் செய்து வருகிறார். மேலும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு உறவினரான ஆனந்த் (29) என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. இவர் திருச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் உமா வழக்கம் போல் நேற்று உமா மருத்துவமனைக்கு பணிக்கு வந்துள்ளார். இந்நிலையில், திடீரென மருத்துவமனையில் உமா மயக்கம் அடைந்து விட்டதாகவும், நீங்கள் உடனடியாக வர வேண்டும் என்றும் உமாவின் குடும்பத்தாருக்கும் தொலைபேசி அழைப்பு மூலம் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த உமாவின் உறவினர்கள் மருத்துவமனைக்கு விரைந்தனர். பின்னர் மருத்துவமனைக்கு வந்து கேட்ட போது உமா இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

அதைத் தொடர்ந்து உமாவின் உடல் திருச்சி அரசு மருத்துவமனை பிரேதப் பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது. உமாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து இது குறித்து தில்லைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து இளம் பெண் எவ்வாறு மரணமடைந்தார்? வேறு ஏதும் பிரச்சனையா? என்று மரணம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் செவிலியர் மரணம் குறித்து ஆர்டிஓ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *