Thursday, August 21, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி தேசிய கல்லூரியில் குடியரசு தின விழா

73 வது குடியரசு தினவிழா திருச்சி தேசியக் கல்லூரியில் 26.01.2022 இன்று காலை சிறப்பாக நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் தலைமை ஏற்று வரவேற்புரை நிகழ்த்தினார். திருச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்ட சுற்றலா அலுவலர் த.ஜெகதீஸ்வரி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றினர்.

பிறகு நிகழ்ச்சி கல்லூரி விருந்தினர் பேசுகையில் நாட்டின் முன்னேற்றத்தைப் பற்றியும், நாட்டிற்காக உழைக்க மாணவ மாணவிகள் முன் வரவேண்டும் என்றும், படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்றும், அரசு கூறும் அறிவுரைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

மேலும் இளைய சமுதாயம் தன்னம்பிக்கை மிக்கவர்களாகவும், ஆசிரியர்கள் அதற்குத் தூண்டுகோலாகவும், வழிகாட்டிகளாகவும் இருக்க வேண்டும் என தம் உரையில் குறிப்பிட்டார்.

கல்லூரியின் சுய நிதிப் பிரிவு துணை முதல்வர் முனைவர் பி.எஸ்.எஸ். அகிலாரி நன்றி கூறினார். கோவிட் நெறிமுறைகளின் வழிகாட்டுதல்படி நிகழ்ச்சி நடைபெற்றது. நாட்டுப்பண்ணுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0

#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *