திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையத்தில் சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் திருச்சிராப்பள்ளி மண்டலத்தின் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் நடராஜன், (திருச்சிராப்பள்ளி மேற்கு) சுரேஷ் பாபு (ஸ்ரீரங்கம்) ஆகியோர் இன்று (30.01.2025) தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் திருச்சிராப்பள்ளி மண்டல பொது மேலாளர் ஆ.முத்துகிருஷ்ணன், துணை மேலாளர்கள் சுரேஷ் குமார் ( வணிகம்), சாமிநாதன் ( தொழில்நுட்பம் ), ரவி பணியாளர் மற்றும் சட்டம்,ராஜேந்திரன் (திருச்சி ) மற்றும் போக்குவரத்து கழக பணியாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள், நடத்துனர்கள், ஓட்டுநர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments