திருச்சி மணிகண்டம் நாகமங்கலம் நேருஜி நகரை சேர்ந்தவர் ராம்குமார் (35). இவர் ரயில்வேயில் சீனியர் உதவி லோக்கல் பைலட்டாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் ராம்குமார் தனது மனைவிக்கு தன் அறுவை சிகிச்சைக்காக கடந்த 6ம் தேதி திருநெல்வேலிக்கு சென்றுள்ளார்.
அறுவை சிகிச்சை முடிந்து நேற்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த பொழுது பீரோவில் இருந்த தோடு அருணாக்கயிறு, வளையல், செயின், கை செயின் உட்பட சுமார் 11 பவுன் நகை மற்றும் வெள்ளி கொலுசு உள்ளிட்ட வெள்ளி சாமான்களும் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது.
இச்சம்பவம் குறித்து ராம்குமார் மணிகண்டம் காவல் நிலையத்தில் புகார் செய்தார் அதன் அடிப்படையில் மணிகண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்துமர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments