திருச்சி திருவெறும்பூர் அருகே காட்டூர் சப்பாணி கோவில் அருகில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக திருவெறும்பூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் அந்தப் பகுதியில் இன்று திருவெறும்பூர் போலீசார் ரோந்து சென்ற பொழுது அங்கு கஞ்சாவை விற்றுக் கொண்டிருந்த வடக்கு காட்டூர் அண்ணா நகர் வி எஸ் காலனியை சேர்ந்த கோபால் என்கிற குஞ்சு கோபால் ( 29) என்ற ரவுடியை பிடித்து அவரிடமிருந்து 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
பின்னர் அவர் மீது வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments