Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் நன்னடத்தை உறுதிமொழி மீறிய ரவுடிக்கு 278 நாள் சிறைதண்டனை

திருச்சி மாநகரம் ஏர்போர்ட் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொலை, அடிதடி, கொள்ளை, வழிப்பறி வழக்கில் ஈடுபட்ட சரித்திரப்பதிவேடு ரவுடி பிரேம் (எ) பிரேம் கண்ணன் வயது 22 த.பெ.ராமு என்பவர் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தடுப்பதற்காக, ஏர்போர்ட் காவல்நிலைய ஆய்வாளரின் பிணையப்பட்ட அறிக்கையின்படி ரவுடியை நிர்வாக செயல்துறை நடுவர் நீதிமன்றம் அவர்கள் முன்பு ஆஜர் செய்ததின் பேரில், ஒரு வருட காலத்திற்கு பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கமாட்டேன், குற்றச்செயல்களில் ஈடுபடமாட்டேன் என்ற நன்னடத்தை உறுதிமொழி பிரமாண பத்திரத்தை மேற்படி ரவுடி தாக்கல் செய்துள்ளார்.

மேற்படி பிரேம் (எ) பிரேம் கண்ணன் நன்னடத்தை பிரமாண பத்திரம் தாக்கல் செய்த பின்பு, நன்னடத்தை பிரமாண பத்திரத்தை மீறி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் கொள்ளை வழக்கில் ஈடுபடுதல், கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டதால் ரவுடி பிரேம் (எ) பிரேம் கண்ணன் மீது ஏர்போர்ட் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நிர்வாக செயல்துறை நடுவர் நீதிமன்றம் முன்பு ஆஜர்படுத்தப்பட்டும் விசாரணை செய்தும், மேற்படி ரவுடி தாக்கல் செய்த நன்னடத்தை பிரமாண பத்திரத்தில் குற்றசெயல்கள் புரியாமல் நன்னடத்தையில் இருந்த காலத்தை தவிர மீதியுள்ள 278 நாட்களை சிறையில் கழிக்க நிர்வாக செயல்துறை நடுவர் அவர்களால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மேற்படி பிரேம் (எ) பிரேம் கண்ணன் உடனடியாக திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *