Thursday, August 21, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

நன்னடத்தை விதி மீறிய ரவுடிக்கு 351 நாள் சிறைதண்டனை

திருச்சி மாநகரம், எடமலைப்பட்டிபுதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மில் காலனி, மாரியம்மன் கோவில் அருகே இளைய சமுதாய இளைஞர்களை சீரழிக்கும் வகையில் அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சாவை விற்பனை செய்து வந்த ரவுடி கிரண் என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் எதிரி தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்யும் குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தடுப்பதற்காக, எடமலைப்பட்டிபுதூர் காவல்நிலைய ஆய்வாளரின் பிணையப்பட்ட அறிக்கையின்படி எதிரியை நிர்வாக செயல்துறை நடுவர் நீதிமன்றம் அவர்கள் முன்பு ஆஜர் செய்ததின் பேரில், ஒரு வருட காலத்திற்கு பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கமாட்டேன், கஞ்சா விற்பனை செய்யும் குற்றச்செயல்களில் ஈடுபடமாட்டேன் என்ற நன்னடத்தை உறுதிமொழி பிரமாண பத்திரத்தை மேற்படி எதிரி தாக்கல் செய்துள்ளார்.

மேற்படி எதிரி கிரண் நன்னடத்தை பிரமாண பத்திரம் தாக்கல் செய்த பின்பு, நன்னடத்தை பிரமாண பத்திரத்தை மீறி இளைஞர்களை சீரழிக்கும் கஞ்சாவை விற்பனை செய்து வந்தவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, நிர்வாக செயல்துறை நடுவர் நீதிமன்றம் முன்பு ஆஜர்படுத்தப்பட்டும் விசாரணை செய்தும், மேற்படி எதிரி தாக்கல் செய்த நன்னடத்தை பிரமாண பத்திரத்தில் குற்றசெயல்கள் புரியாமல் நன்னடத்தையில் இருந்த காலத்தை தவிர மீதியுள்ள 351 நாட்களை சிறையில் கழிக்க நிர்வாக செயல்துறை நடுவர் அவர்களால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மேற்படி எதிரி கிரண் உடனடியாக திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…

https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *